பண்ணின்; நேர்மொழி மங்கைமார் பலர்
பாடியாடிய வோசை நாடொறுங்
கண்ணின் நேர் அயலே பொலியும் கடற்காழிப்
பெண்ணின் நேரொரு பங்குடைப் பெருமானை
எம்பெருமான் என்றென்றுன்னும்
அண்ணலார் அடியார் அருளாலுங் குறைவிலரே.
பண்ணிசை போல இனிதாகப் பேசும் பெண்டிர் பாடி ஆடி மகிழும் காட்சியும், ஓசையும், தினமும் விளங்கும் கடற்கரையை உடையது, சீர்காழி. இத்தலத்தில் பெண்ணொரு பாகனாய் விளங்கும் சிவபெருமானை, எம் தலைவன் என்று பாடி வணங்கிக் கருதும் அடியவர்கள் பொருட்செல்வத்துடன் அருட்செல்வமும் குறைவில்லாது பெறுவர்.
.
No comments:
Post a Comment