29 Dec 2018

தினமும் ஒரு தேவாரம் மற்றும் திருவாசகம்

வரும் ஜனவரி 1 2019  முதல் " தினமும் ஒரு தேவாரம் மற்றும் திருவாசகம்" பகிரப்படும்.
Share பண்ணுங்க.

https://devaramthiruvasaham.blogspot.com/

2 Nov 2013

தீராத வயிற்று நோய் தீர்க்கும் பதிகம்- Chronic abdominal therapeutic Pathigani( To Cure the Noncurable Stomach ache)


3. தீராத வயிற்று நோய் தீர்க்கும் பதிகம்
(திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது)

பண்- கொல்லி                                         4-ம் திருமுறை

    திருநாவுக்கரசு சுவாமிகள் சைவ சமயத்தில் பிறந்தவரா யிருந்தும்
 நம்பர் அருளாமையினால் கொல்லாமை மறைந்துறையும் சமண சமயம்
 சேர்ந்து, தருமசேனர் என்ற பெயருடன் அச் சமயத்தில் தலைசிறந்து
 விளங்கினார். அவரது தமக்கையாராகிய திலகவதியார் தமபியாரைப்
 பரசமயப் படுகுழியினின்றும் கரையேற்ற வேண்டும் எனப் பரமனைப்
 பல்லாற்றாலும் துதித்து வேண்டினார். திருவதிகை வீரட்டானேசுவரரும்
 திலகவதியாருக்கு இரங்கி கனவில் தோன்றித் தம்பியாரைச் சூலை
 மடுத்து ஆள்வோம் எனக் கூறியருளி, அவ்வண்ணமே தருமசேனரைச்
 சூலை நோய் சென்றடையுமாறு அருள, அதுவும் கடுங்கனல்,
 கொடுவிடம், வச்சிரம் மற்றும் கொடிய அனைத்தும் ஒன்று சேர்ந்தது
 போல அவரது வயிற்றையடைந்து குடரினை முடக்கிக் பெருந்
 துன்பத்தை விளைவித்தது. அக்கொடிய சூலையைப் போக்க இயலாது
 சமணர்கள் கைவிட்டனர். பின்னர் இறைவர் திருவருள் கூடியமையால்
 தருமசேனர் திருவதிகை சென்று தமக்கையாரைச் சரணடைந்தார்.
 திலகவதியாரும், தம்பிக்கு ஐந்தெழுத்தோதித் திருநீறு அளித்தார்.
 

28 Oct 2013

திருநாவுக்கரசர் சுவாமிகள் இடத்தில் விளங்கிய அற்புதங்கள்-Swami Thirunavukkarasar


1.  சமணர்களாலே ஏழுநாள் சுண்ணாம்பறையிலே பூட்டப்பட்டு இருந்தும்
   'மாசில் வீணையும்' என்ற பதிகம் பாடி வேகாது பிழைத்தது.

2.  சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாவாது
   பிழைத்தது.

3.  சமணர்கள் விடுத்த யானையினால் வலஞ் செய்து வணங்கப்பட்டது.

4.  சமணர்கள் கல்லிலே சேர்த்துக் கட்டிச் சமுத்திரத்தில் இடவும்,
   'சொற்றுணை வேதியன்' என்னும் திருப்பதிகம் பாடி அக்கல்லே
   தோணியாகக் கரை ஏறினது.