14 Jan 2025

திருவாசகம்




பெரும் பெருமான் என் பிறவியை
   வேரஅறுத்துப் பெரும் பிச்சுத்
 தரும் பெருமான் சதுரப் பெருமான்
                  என் மனத்தின் உள்ளே
              வரும் பெருமான் மலரோன்
  நெடுமால் அறியாமல் நின்ற
              அரும் பெருமான் உடையாய்
    அடியேன் உன் அடைக்கலமே.

 வானவர் தலைவனே, என் பிறவியை வேரறுத்து, அருட்பித்தினை உண்டாக்கு கின்ற பெருந்திறலுடைய பெருமானே, என் சித்தத்துள் குடிகொண்ட சிவ குருவே, பிரமனும் திருமாலும் தேடி அலைந்தும் காணுதற்கு எட்டாத பரம்பொருளே, என்னை உடையவனே, அடியேன் உனது அடைக்கலம் ஐயனே காத்தருள்க.

No comments:

Post a Comment