விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
விண்ணவர்களுக் கெல்லாம் மேலான அறிவு நூல் ஆசானை, மண்ணுலகை ஆளுகின்ற வேந்தர்களுக் கெல்லாம் எடுத்துக்காட்டாக விளங்கும் மகாதேவனை, சங்கம் வைத்துத் தமிழ் காத்த தகைசார்ந்த பாண்டியன் ஆனவனை, மங்கை உமையவளின் பாகனை, யாம் விரும்புகின்ற திருப்பெருந்துறையிலே பெருமை மிக்க திருவடிகளைக் காண்பித்தருளி நாயனைய என்னை அடிமையாகக் கொண்ட திருவண்ணாமலை அண்ணலை நாம் பாடிப் பணிவோமாக.
No comments:
Post a Comment