8 Jan 2025

திருவாசகம் பாடல் வரிகள் மற்றும் பொருள்



 தேவ தேவன் மெய்ச்சேவகன் 
     தென்பெருந்துறை நாயகன் 
                 மூவராலும் அறியொணா 
         முதலாய ஆனந்தம் மூர்த்தியான்
 யாவராயினும் அன்பர் அன்றி 
        அறியொணா மலர்ச் சோதியான்
   தூய மாமலர்ச் சேவடிக்கண் நம் 
    சென்னி மன்னிச் சுடருமே.
              
    
    விண்ணவர் தலைவன், மெய்யான வீரன், மூவராலும் அறியப்படாத முதல்வன், பேரின்ப வடிவினன், பெருந்துறைப் பேராளன், தூய அன்பு கொண்ட அன்பர் தவிரப் பிற எவராலும் அறிய முடியாத பூவொளி மேனியன் அவன். தாமரை மலர் போன்ற அவனது திருவடிகளில் நமது தலை சாய்த்து வணங்கி வாழ்த்துவோம். வளம் பெறுவோம்.

No comments:

Post a Comment