8 Jan 2025

தேவாரம் பாடல் வரிகள் மற்றும் பொருள்





          பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்;
          நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்;
          அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
          தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ.


      பனைமரம் போன்ற தும்பிக்கையினையும், மூன்று இடங்களிலிருந்து வழியும் மதநீரையும் கொண்ட யானையின் தோலை உரித்தவன், தன்னை நினைப்பவர் உள்ளத்தை கோயிலாகக் கொண்டு இருப்பவன், எல்லா உருவங்களிலும் பொருந்தி இருப்பவன்;, அத்தகைய அம்பலக் கூத்தனை தினையளவு பொழுதேனும்நான் மறந்து வாழ்வேனோ? மாட்டேன்.

No comments:

Post a Comment