பாலனாய் விருத்த னாகிப் பனிநிலா எறிக்கும் சென்னி
காலனைக் காலாற் காய்ந்த கடவுளார் விடை ஒன்று ஏறி
ஞாலமாம் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
நீலம்சேர் கண்டனார்தாம் நீண்டு எரி ஆடுமாறே.
சிறுவனாகவும், வயது முதிர்ந்தவனாகவும் தோற்றம் கொண்டவன், குளிர்ந்த நிலவு ஒளி வீசும் முடியை உடையவன்;, காலனைத் தன் காலால் உதைத்த கடவுள, காளை மாட்டின் மீது ஏறித் தில்லை என்னும் பதியுள் அமைந்த புகழ்மிக்க சிற்றம்பலத்தில், நீலம் சேர்ந்த கழுத்தோடு நீண்டு எரியும் நெருப்பு ஆடுவது போலவே தோன்றினார்.
No comments:
Post a Comment